tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION): முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக
T N T C W U

முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக

தீக்கதிர் செய்தி
-------------------------

முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக
சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்



அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சக் கூலி ரூ.10 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாபெரும் ஆர்ப்பாட்டத்தை செவ்வாயன்று நடத்தியது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் முழக்கமிட்டனர்.(செய்தி-3)

குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 10 ஆயிரமாக நிர்ணயிக்கக் கோரிக்கை : சிஐடியு தலைமையில் மாவட்டங்களில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்



 

குறைந்தபட்ச கூலி ரூ.10 ஆயிரமாக நிர்ணயித்திடுக!
தமிழகம் முழுவதும் சிஐடியு ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 11 -அனைத்து தொழிலாளர் களுக்கும் குறைந்தபட்சக் கூலி 10ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவ தும் சிஐடியு சங்கத்தினர் செவ் வாயன்று (ஜூன் 11) ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.விலைவாசி உயர்வுடன் இணைக்கப்பட்ட குறைந்த பட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயி ரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஜூலை முதல் வாரத்தில் பிரச் சாரம் சிஐடியு அகில இந்திய மாநாடு அறைகூவல் விடுத்தது.அதனடிப்படையில் தமி ழகத்தில் நடைபெற்ற பிரச் சாரத்தின் நிறைவாக ஜூன் 11 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டம் சார்பில் நுங்கம்பாக்கம், வள்ளு வர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசியது வருமாறு:
மத்திய அரசு கடைபிடித்து வரும் மும்மயக் கொள்கை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது; அது ஏழை மக்களுக்கு எதிராக உள்ளது. கிராமப்புறங்களில் வறுமை பெருகி, விவசாயம் அழிந்து, விவசாயிகள் நகரங்களை நோக்கி வருகின்றனர். மக்களி டையே வாங்கும் சக்தி குறைந் துள்ளது. இதனை சரிசெய்ய வேலைவாய்ப்பை பெருக்கு வதற்கான திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.மத்திய அரசில் வாரம் ஒரு ஊழல் அம்பலமாகிக் கொண் டிருக்கிறது. பெரு முதலாளி களுக்கு அளிக்கும் சலுகை சாதாரண மக்களுக்கு பயன ளிக்கவில்லை. சாதாரண மக் கள் பயன்பெறும் வகையில் மத் திய அரசு திட்டம் வகுக்க வேண்டும்.அனைத்து வகை தொழி லாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி 10ஆயிரய்ம ரூபாய் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். முறைசாரா தொழி லாளர் நிதியத்தை உருவாக்கி, அதற்கு ஆண்டுக்கு 1.50லட்சம் கோடி ரூபாயை ஒதுக்க வேண் டும். ஓய்வூதியத்தையும், வருமா னத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும். சட்டப்படி 8 மணி நேர வேலை என்பதை உத்தர வாதப்படுத்த வேண்டும். நிரந்தர தொழிலாளர்களுக்கு இணை யாக ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்,காவல்துறையில் 5ஆயிரம் ரூபாய்க்கும், உள்ளாட்சிகளில் துப்புரவு பணிக்கு மாதம் 2,150 ரூபாய்க்கும் ஆள் எடுப்பதை யும், தொகுப்பூதியம், மதிப்பூதி யம், ஒப்பந்த ஊழியர் போன்ற முறைகளை கைவிட வேண்டும் என நாடு முழுவதும் போராட் டம் நடந்து வருகிறது.சாதி உணர்வைத் தூண்டி தலித், தலித் அல்லாதோர் என மக்களைப் பிரிக்கின்றனர். சாதி, மதத்தின் பெயரால் சுரண் டலுக்கு உள்ளாகி உள்ள மக் கள் கூறுபோடப்படுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் உரிமைபெற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இன உணர் வைத் தூண்டி ஏழை மக்களை பிரித்து, போராட்ட உணர்வு களை கூறுபோடும் அடை யாள அரசியலை எதிர்த்தும் இந்தப் போராட்டம் நடை பெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.வடசென்னை மாவட்டத் தில் 4 மையங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந் திய துணைச் செயலாளர் மாலதி சிட்டிபாபு, மாவட்ட தலைவர் பி.என்.உண்ணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







 திருவாரூர், ஜூன் 11 -சிஐடியு சார்பில், செவ் வாயன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற் றன. மத்திய அரசு அலுவல கங்கள் முன்பாக நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியத் தை ரூ. 10 ஆயிரமாக நிர்ண யிக்க வேண்டும்; தேசிய சமூ கப் பாதுகாப்பு நிதியம் ஏற் படுத்த வேண்டும்; நிரந்தரத் தன்மையுள்ள தொழில்க ளில் வேலை செய்யும் ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்; தொழி லாளர் சட்டங்களை அமல் படுத்தத் தவறும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட வேண்டும்; அனைத்து முறைசாரா பிரிவு தொழி லாளர்களுக்கும் உத்தரவாத மான பென்சன் வழங்க வேண்டும்; உணவுப் பாது காப்பு சட்டம் என்ற பெய ரில் பொதுவிநியோகத்தை சீரழிக்க முயல்வதைக் கை விட வேண்டும்; அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும்; தொழிலாளர் நலவா ரிய அலுவலகங்களில் உள்ள குறைபாடுகளை களைந்து சலுகைகள் கிடைப்பதை உறுதிப்ப டுத்த வேண்டும் என ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றவர் கள் முழக்கமிட்டனர்.
திருவாரூர் : திருவாரூரில் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.முருகையன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் கே.திருச்செல் வன் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஜி.பழனிவேல், மாவட்டத் துணைத்தலை வர் நா.பாலசுப்பிரமணியன், சிஐடியு-வின் பல்வேறு அரங்க நிர்வாகிகள் ஜி.ராம கிருஷ்ணன், எம்.பி.கே. பாண்டியன், கே.எம்.லிங் கம், எம்.கே.என்.அனிபா, எம்.அசோகன், இரா. மாலதி, ஆர்.சோமசுந்தரம், எஸ்.அம்பலவாணன், டி.கலியமூர்த்தி, ஏ.முத்து வேல், ஜி.கோபாலகிருஷ் ணன், ஆர்.கருணாநிதி, பி.என்.லெனின், ஜி.ரகுபதி, டி.ஜெகதீசன், ஜே.வினோத் கண்ணன், ஏ.ஒன்.மணி, கே.ராமச்சந்திரன், ஆர்.ரவி உட்பட நூற்றுக்கணக்கா னோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். முன்ன தாக பழைய ரயில்வே நிலை யத்தில் இருந்து தொழிலா ளர் பேரணி புறப்பட்டது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் ப.சண் முகம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் க. செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் எம்.ஜியாவுதீன், வி. அரசுமுகம், சி.அடைக்கல சாமி, கே.முகமதலிஜின்னா, செ.பிச்சைமுத்து, சி.மாரிக் கண்ணு, ஜி.நாகராஜ், எஸ். யாசிந், ஏ.முத்தைய உள்ளிட் டோர் பேசினர்.
கரூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம் : கரூரில் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஜி.ஜீவானந்தம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் என். ராஜீ, எஸ்.சாம்பசிவம், எம். வேலுசாமி, அ.காதர்பாட் ஷா, குமரேசன், எஸ். கிருஷ் ணமூர்த்தி, சரவணன், தண்டபாணி, சக்திவேல், ரங்கராஜ், தங்கவேல் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர்.






தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றிட வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் பத்தாயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று ஜுன் 11 ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் செல்வம் தலைமை தாங்கினார் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் இ.சங்கர் கே,மனோகர், ஆர்.மணி,ஜோசப், பகத்சிங்தாஸ், பொன்னுரங்கம் ஆகியோர் பேசினர்









1.சேலம்2.மேட்டூர்
சேலம், ஜூன் 12-
முறைசாரா தொழிலாளர் நிதியத்தை உருவாக்கி முறைசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு சார்பில் சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் என நிர்ணயித்திட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழித்திட வேண்டும். ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும். வேலைவாய்பை உருவாக்கிற திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் சேலத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் டி.உதயகுமார் தலைமை வகித்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புகுழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைரமணி, ஜவுளி சங்கச் செயலாளர் பி.ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிறைவாக, சிஐடியு மாவட்டத் தலைவர் பி.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.சி.கோபிகுமார், சி.மயில்வேலன், ஆர்.ஆறுமுகம், ஏ.கோவிந்தன், சி.கோவிந்தன், பாதையோர சங்க தலைவர் எம்.குணசேகரன், விசைத்தறி சங்க செயலாளர் பி.சந்திரன், கைத்தறி சங்க செயலாளர் எஸ்.செல்லபாண்டியன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் 100 பெண்கள் உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேட்டூர்மேட்டூரில் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சேலம் மாவட்ட பொருளாளர் வீ.இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட உதவி தலைவர் ஆர். வெங்கடபதி, மாவட்ட உதவி செயலாளர் சி.கருப்பண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். நிறைவாக சிங்கராயன் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.





அரியலூர், ஜூன் 12 -குறைந்தபட்ச ஊதியத் தை ரூ. 10 ஆயிரமாக நிர்ண யம் செய்ய வேண்டும்; நிரந் தரத் தன்மையுள்ள வேலை களில் பணியாற்றும் ஒப் பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, சிஐ டியு சார்பில் செவ்வாயன்று நாடு தழுவிய ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.அதனொரு பகுதியாக, அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் அஞ்சல் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துரைச்சாமி தலைமை வகித்தார். அயூப் கான் வரவேற்றார். மனோ கரன், மதி, சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித் தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் சிற்றம்பலம் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். உழைக் கும் பெண்கள் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஆதி லட்சுமி, ராமதாஸ், எல்ஐசி ஊழியர் சங்க செயலாளர் விஜயகுமார், வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து, தமுஎகச நிர் வாகி சுப்பிரமணியன், மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் பாக்கியம், மாணவர் சங்க மாவட்ட அமைப்பாளர் துரை.அரு ணன் ஆகியோர் ஆர்ப்பாட் டத்தை ஆதரித்துப் பேசி னர்.
பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி செல்லபாண் டியன் நன்றி கூறினார்.ஜெயங்கொண்டம் பூங்கா முன்பு தையல் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.என்.துரை ராஜ் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சி.உத்திராபதி, மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் பி.பத்மாவதி, கைத் தறித் தொழிலாளர் சங்க நிர் வாகிகள் பிஅழகுதுரை, ஏ.ஜி.தங்கராசு, பி.செல்வ ராஜ், வி.சேப்பெருமாள், ஜி.பாபு, ஆர்.கௌரி, எஸ். சம்பத், எஸ்.எம்.செல்வ ராஜ், எம்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் : பெரம்பலூரில் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டப் பொருளாளர் பி.கிருஷ் ணசாமி தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் கே.விஜயன், மாவட்டச் செயலாளர் ஆர்.அழகர் சாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட நிர் வாகிகள் ராஜகுமாரன், கணேசன், அகஸ்டின், எஸ். கே.சரவணன், ரங்கராஜ், வேல்முருகன், மணிமேக லை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி : திருச்சியில் ஜங்சன் காதி கிராப்ட் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் எஸ். சம்பத், அழகப்பன், மாவட்ட துணைச்செயலாளர்கள் பக்ரூதீன்பாபு, எஸ்.எம். அண்ணாதுரை ஆகியோர் பேசினர்.மாவட்டக்குழு உறுப்பி னர்கள் வி.கே.ராஜேந்திரன், ராமர், சிவக்குமார், ஆரோக் கியம், மாவட்ட துணைச் செயலாளர் செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்த ஊழியர்களுக்கும் ஊதியம்
5 மையங்களில் சிஐடியு ஆர்ப்பாட்டம்


சென்னை, ஜூன் 11
-நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்த ஊழி யர்களுக்கும் ஊதியம் வழங்க வலியுறுத்தி சிஐடியு சார்பில் சென்னையில் 5 மையங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஜூன் 11 அன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக வட சென்னை மாவட்டத்தில் 4 மையங்க ளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய துணைச் செயலாளர் மாலதி சிட்டி பாபு பேசுகையில், தமிழக அரசு இலவசங்களை வழங்கு வதை விட, தொழிலாளர் களுக்கு வழங்க வேண்டிய நியாயமான உரிமைகளை வழங்க வேண்டும். விலை வாசி உயர்வு நடுத்தர மக்க ளின் வாழ்வாதாரத்தை கேள் விக்குறியாக்கி வருகிறது என்று கூறினார்.மூலதனத்தால் மட்டும் தொழில் வளர்ச்சி ஏற்படாது. தொழிலாளர்களின் உழைப்பே பொருளா தாரத்தை மேம்படுத்தும். தொழிலாளர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கச் செய்யும் அரசை, ஆட்டம் காணச் செய்ய சிஐடியு அடுத்தக்கட்ட போராட்ட வியூகத்தை வகுத்து வரு கிறது என்றும் அவர் கூறி னார்.இந்தப் போராட்டத் தில் மாவட்டத் தலைவர் பி.என்.உண்ணி தலைமை தாங்கினார். பா.கருணா நிதி (ஆட்டோ), சி.திரு வேட்டை (சுமைப்பணி), எம்.பகவதி, கவிமணி (உழைக்கும் பெண்கள்) உள்ளிட்டோர் பேசினர்.திருவொற்றியூர்: அஜாக்ஸ் பேருந்து நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தங்க சாமி (அமைப்புசாரா) தலைமை தாங்கினார். வீர அருண் (மீன்பிடி), வெங் கட்டயா (மின் ஊழியர் மத்திய அமைப்பு), செங் குட்டுவன் (போக்குவரத்து), அம்சவேணி (ஆட்டோ) ஆகியோர் பேசினர்.மணலி: சிஐடியு பகுதிச் செயலாளர் சிட்டி பாபு தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ஆர். ஜெயராமன், செல்வராஜ், இரா.ராஜவர்மன் உள்பட பலர் பேசினர்.



ஆவடி: பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலை வர் எஸ்.கே.மகேந்திரன் தலைமை தாங்கினார். சி.சடையன், ராமமூர்த்தி (அமைப்புசாரா), ஜெய பாலன் (கட்டுமானம்), தமி ழரசி (தையல்) ஆகியோர் பேசினர்.அம்பத்தூர் உழவர் சந்தை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பால் சாமி தலைமை தாங்கி னார். லெனின் சுந்தர் (சிஐ டியு), ஏ.ராயப்பன் (மோட் டார் வாகனம்), ரவிச்சந்தி ரன் (மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்டோர் பேசினர்.தென்சென்னைதென்சென்னை மாவட் டம் சார்பில் வள்ளுவர் கோட்டம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பா.முனுசாமி தலைமை தாங்கினார். மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம் எல்ஏ, மாநிலக்குழு உறுப் பினர் இ.பொன்முடி, மாவட்ட பொருளாளர் பா.பாலகிருஷ்ணன், நிர் வாகிகள் வி.தாமஸ் (முறை சாரா), எம்.குமார் (சுமைப் பணி), ப.சுந்தரம் (சலவை), பி.நாகேந்திரன் (ஆட் டோ), எம்.பாண்டியன், இ.மூர்த்தி (கட்டுமானம்) உள்ளிட்டோர் பேசினர்.காஞ்சிபுரம்: காஞ்சி புரம் மாவட்டத்தில் மது ராந்தகம், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய 3 இடங் களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.



மதுராந்தகத்தில் தபால் நிலையம் எதிரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் பி.மாசிலாமணி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் எம். ஆர் சங்கர், இ.கோவலன், இளங்கோவன், சிபிஎம் மதுராந்தகம் பகுதி செய லாளர் கே.வாசுதேவன் ஆகியோர் பேசினர். ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ் பேசி னார். முன்னதாக மதுராந்த கம் பேருந்து நிலையத்திலி ருந்து தபால் நிலையம் வரை ஊர்வலம் நடை பெற்றது. செங்கல்பட்டு தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கே.வேலன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் ஜி. கண்ணன், என்.பால்ராஜ், எ.புருசோத்தமன், கே. சேஷாத்திரி, என்.அன்பு உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் பேசினார்.காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலை வர் எ.வாசுதேவன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன், மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர் எம். ஆறுமுகம், ஜி.வசந்தா உட் பட பலர் பேசினர். ஆர்ப் பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் சிங்கார வேலு பேசினார்.


திருவள்ளூர்: திரு வள்ளுர் மாவட்டத்தில் 2இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி தபால் நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி. ஆறுமுகம் தலைமை தாங்கினார். சிஐ டியு மாநில துணை பொதுச் செயலாளர் வி. குமார், மாவட்ட பொருளாளர் ஆர். பூபாலன், ஆட்டோ சங்க மாவட்டச் செயலா ளர் எம். சந்திரசேகரன், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சி. நாகேஷ்ராவ், கைத்தறி நெசவு தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஜி. செல்வ ராஜ் மாவட்ட குழு உறுப் பினர் சீனிவாசன் உட்பட பலர் பேசினர். சிஐடியு நிர் வாகி கே. அர்ஜூனன் நன்றி கூறினார்.திருவள்ளூர் அருகில் உள்ள மணவாளன் நகரில் நடைபெற்ற ஆர்ப் பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் பால குமார் தலைமை தாங் கினார். இதில் சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. ராஜேந்திரன், வடசென்னை மாவட்டச்செயலாளர் ஏ.ஜி. காசிநாதன் உட்பட பலர் பேசினர்.


நன்றி
தீக்கதிர்