பத்திரிக்கை செய்தி
சேவைகளை மேம்படுத்த தொழிலாளர்கள் தயார்- BSNL நிர்வாகம் முன் வருமா?
அன்பார்ந்த நண்பர்களே,
இந்திய நாட்டின் பொருளாதார மேம்ப்பாட்டிற்கும், அரசின் கொள்கை முடிவுகளை அமலாக்கவும் தொலை தொடர்பு துறையில் ஒரு பலமான பொதுத்துறை நிறுவனம் தேவை என்பதை அரசாங்கம் பாராளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளது. ஆனால் அரசின் நடவடிக்கைகள் அந்த திசை வழியில் இல்லை. அதற்கு மாறாக , மத்திய அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் அதன் 4G சேவைகளை துவக்க விடாமல் பல்வேறு வழிகளில் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. அரசின் கொள்கை முடிவால், BSNLல் பணியாற்றிய சுமார் 80,000 ஊழியர்களும் அதிகாரிகளும், விருப்ப ஓய்வு திட்டம் என்ற பெயரில் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டனர்.
அவர்கள் பார்த்து வந்த பெரும்பாலான பணிகள் எல்லாம் OUTSOURCING என்ற முறையில் ஒப்பந்தம் விடப்பட்டது. WORK CONTRACT என்ற பெயரிலும் செலவு குறைப்பு என்ற பெயரிலும் தொலை தொடர்பு சேவைக்கு சம்பந்தமில்லாத பல ஏஜென்ஸீடம் தொலை தொடர்பு பணி கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், இந்த புதிய ஒப்பந்த முறை அமலாக்கப்பட்டதால், BSNL ன் தொலை தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக, விருப்ப ஓய்வு திட்டத்தில் வெளியேறிய ஊழியர்கள் செய்து வந்த லேண்ட் லைன் மற்றும் ப்ராட்பேண்ட் பராமரிப்பு பணிகளை OUTSOURCING என்ற முறையில் ஒப்பந்த தாரருக்கு விடப்பட்டது. அது அந்த பணிகளை செய்வதற்கு தேவையான ஒப்பந்த ஊழியர்களை, ஒப்பந்தக்காரர்கள் நியமிக்கவில்லை. உதாரணமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை விருதுநகர் சாத்தூரை சுற்றி 40 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள 18 தொலைபேசிநிலையங்களில் மொத்தம் 4 ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இன்னும் பல மாவட்டங்களில் நூற்றுக் கணக்காண தொலைபேசி நிலையங்களில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லை.
அதனை BSNL நிர்வாகம் கண்டு கொள்ளவும் இல்லை.முறைப்படுத்தவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒவ்வோரு மாவட்டத்திலும், முறையான பராமரிப்பு இல்லாத்தால் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் லேண்ட் லைன் மற்றும் ப்ராட் பேண்ட் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் மாதம் மட்டும் சுமார் 10 000 லேண்ட் லைன்களும் 6 000 பிராட்பேண்ட் இணைப்புக்களும் சரண்டர் ஆகி உள்ளன .
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக டவர்களை பராமரிப்பதற்கு கூட போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் செல்போன் சேவைகளும் கடுமையான பாதிப்புக்கள ஏற்பட்டுள்ளன.. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 2 50 மொபைல் சந்தாதாரர்கள் சரண்டர் செய்துள்ளனர். பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளன. பல்லாண்டுகளாக பிற நிறுவன்ங்களிலிருந்து BSNL க்கு மாறி வந்த சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டு அட்டோபர் மாதம் மட்டும் தமிழ்நாடு முழுவதும் 50 000 சந்தாதாரகள் தனியார் நிறுவன்ங்களுக்கு மாற்றலாகி சென்றுள்ளனர். அதே போல வாடிக்கையாளர் சேவை மையங்கள் பலவும், தனியார்களுக்கு கொடுக்கப்பட்ட காரணத்தால், பொது மக்களுக்கு சிறந்த சேவைகள் கிடைப்பதில் பலகீனம் ஏற்பட்டுள்ளது. BSNL சிறந்த சேவையை உறுதிப்படுத்தாத காரணத்தால் தனியாருக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 3 000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சுமார் 18 மாத காலம் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்தது. செய்த வேலைக்கு சம்பளம் வழங்கிட கேட்டு உயர் நீதி மன்றம் சென்று சாதகமான உத்தரவுகளை ஒப்பந்த தொழிலாளர்கள் பெற்றனர். ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வந்த நிர்வாகம் நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் ஆட்குறைப்பை தீவிரப்படுத்தியது. சம்பளமே இல்லாமல் 18 மாத காலமாக வேலை செய்த ஒப்பந்த தொழிலாளர்களை அனைத்து சட்ட விதிகளையும் மீறி . மனசாட்சியோ மனித பண்புகளோ இல்லாமல் நடந்து கொள்கின்றது.
ஒப்பந்த தொழிலாளர்கள் வாங்கும் அற்ப சம்பளத்தை குறைத்தால் BSNL நிதியை வளப்படுத்த முடியும் என்று தவறான கணக்கிடு செய்கின்றது. சேவை செய்வதற்கு தேவையான ஊழியர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செலவுக் குறைப்பு என்பதையே செயல்படுத்துகின்றது. இது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் செயலை போன்றது. முதலிலேயே சரி பாதி ஊழியர்கள் VRSல் சென்ற பின்னர், ஒப்பந்த ஊழியர்களையும் பணி நீக்கம் செய்கின்ற காரணத்தால் சேவை கடுமையாக பாதிக்கிறது.
இது தொடர்பாக ஒரு தொடர் போராட்டங்கள் நடத்திய பின்னர், நவம்பர் 5ஆம் தேதி சென்னை தலைமை பொது மேலாளர் அவர்களிடம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், , பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டது.
ஆனால் உடன்பாட்டை போட்ட நிர்வாகம் அதனை அமலாக்க எந்த ஒரு முயற்சியும், செய்யாமல் உள்ளது. . உடன்பாடு போட்டு 45 நாட்கள் கழிந்த பின்னரும் அதனை அமலாக்காமல் நிர்வாகம் இழுத்தடிக்கின்றது.
மேலும் தமிழகத்தில் BSNL நிறுவன பணிகளின் சேவைத்தரத்தை உயர்த்துவதற்கு, BSNLல் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும், ஒன்றாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என பல மாதங்களாக ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்கள் கோரிக்கை வைத்தபோதும் தமிழ் மாநில BSNL நிர்வாகம் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது.
எனவே, தமிழக BSNLல் சீரழிந்து கிடக்கும் சேவைகளை மேம்படுத்த அனைத்து சங்க கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், தொழிற்சங்கத்தோடு, நவம்பர் 5ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை அமலாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து தமிழ் மாநில நிர்வாகத்தை சந்திக்க தொழிற்சங்கங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகி போய் விட்டது. தமிழ் மாநில நிர்வாகம், தொழிற்சங்கங்களை சந்திக்க தொடர்ந்து மறுத்து வந்தது. எனவே வேறு வழியின்றி, எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை எனில் 09.12.2020 முதல் தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்துவது என முடிவெடுத்தன.
இன்று வரை நிர்வாகம் தொழிற்சங்கங்களை அழைத்து பேசவில்லை. எனவே 09.12.2020 அன்று தமிழ்கத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும், சகிதிமிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று உள்ளன. அடுத்த கட்டமாக 11.12.2020 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், மாலை நேர தர்ணா போராட்டமும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 17.12.2020 அன்று அனைத்து மாவட்ட தலைநகர்களிலும், ஒரு அமைதியான உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கெல்லாம் தாண்டி, 21.12.2020 முதல் இரண்டு மாநில செயலர்களும், காலவரையற்ற உண்ணா விரதம் மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்வு காண வேண்டிய தமிழ் மாநில நிர்வாகம் சேவைகள் தொடர்பான பணிகளை விரைவு படுத்த வேண்டும், இல்லையெனில் தமிழக BSNLல் தொடர்ந்து போராட்டங்கள் தவிர்க்க இயலாதது ஆகிவிடும்.
நன்றி
வாழ்த்துக்களுடன்,
/மாவட்ட செயலர்/ / மாவட்ட செயலர்/
----------------மாவட்டம்.