tntcwu.blogspot.in தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்-VDR 278 (TAMILNADU TELECOM CONTRACT WORKERS UNION)
T N T C W U


 


 

மற்றொரு தோழரின் குடும்பத்திற்கு EPF பென்சன்

 நாகர்கோவில் மாவட்டத்தில் டவர் பகுதியில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்த தோழர்  s. சுப்பிரமணிய பிள்ளை 15 05 2019 அன்று உடல் நலம் சரியில்லாமல் மரணமடைந்தார். திருமணமாகாத அவருக்கு சுப்பம்மாள் என்ற வயதான தாயார்  மட்டும் உண்டு.

அவருடைய  ESI லிருந்து இறுதிச்சடங்கிற்கான தொகை 15 000,    EPF DEPOSIT   தொகை  , EDLI ( EPF DEPOSIT LINKED INSURANCE )   தொகை    தாயாருக்கு EPF PENSION தொகை கேட்டு தொடர்ந்து நாகர்கோவில் TNTCWU மாவட்ட சங்கம் வலியுறுத்தி வந்த்தது. முதற்கட்டமாக 2019 ஆண்டிலேயே ESI லிருந்து இறுதிச்சடங்கிற்கான தொகை 15 000 கிடைத்து விட்ட்து . ஆனால் மற்ற தொகை எதுவும் கிடைக்க வில்லை.

 தொடர்ச்சியாக பல மாதங்கள்  மல்லி செக்யூரிட்டி சர்வீஸ், கவிக்கோ ஒப்பந்தகாரர்கள் மற்றும் அம்பத்தூர் , தாம்பரம் EPF அலுவலக்ங்களுக்கு நேரில் சென்று மனு அளித்தும் பேச்சு வார்த்தை நடத்தியும்  நாகர்கோவில் மாவட்டச்சங்கம் முயற்சி செய்து வந்தது. பல கட்ட முயற்சி தற்போது வெற்றியடைந்துள்ளது.

தோழர் சுப்பிரமணியத்தின்  EPF DEPOSIT தொகையான ரூபாய் 2 61 230, EDLI தொகை ரூபாய் 1 20 000 , அவருடையா தாயார் சுப்பம்மாளுக்கு 16 05 2019 முதல் மாத EPF பென்சன் ரூபாய் 2 796 அனுமதி அளித்து உத்தரவு வெளியாகி விட்டது. 

பென்சன் நிலுவை தொகை ரூபாய்  1 20 000 கிடைக்கும்.

தொடர்ச்சியான முயற்சி செய்து வெற்றி கண்ட நாகர்கோவில் மாவட்ட சங்கத்திற்கும் மாவட்ட செயலர் தோழர் A.  செல்வத்திற்கும் பாராட்டுக்கள் ! வாழ்த்துக்கள் !


தோழமையுடன் ,

M. சையத் இத்ரீஸ்,

TNTCWU மாநிலச் செயலர்                                                                                                                      02 02 2023


 

 அதிகரித்து வரும் சுரண்டல்

முதலாளித்துவ சுரண்டலின் நவீன வழிமுறைகள் மேலும் மேலும் தீவிர மடைந்துவரும் நிலையில், முதலாளி - தொழிலாளி உறவுகளின் அடிப்படை அம்சங்கள் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரும் மாற்றங் களுக்கு உள்ளாகி வருகிறது என்கிறார் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான். 

 இந்த மாற்றங்கள் தொழிலாளி வர்க்கத்தின் சேர்மானத்திலேயே மிகப்பெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு இட்டுச் செல்கிறது என அவர் குறிப்பிடுகிறார். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) 17வது அகில இந்திய மாநாடு ஜனவரி 18 அன்று பெங்களூரில் துவங்குகிறது. ஜனவரி 22 வரை நடைபெற உள்ள இம்மாநாட்டில் நாடு முழு வதும் இருந்து 1500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கிறார் கள். இந்த மாநாடு, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரச்சனைகளை மிக விரிவாக ஆராய உள்ளது. 


வேலைவாய்ப்பு உறவுகளில் மாற்றம்

அத்தகைய ஆய்வுகளில் மிக முக்கியமானது, இந்தியாவில் வேலைவாய்ப்பு உறவுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் பற்றியது ஆகும். இதுதொடர்பாக தீக்கதிருக்கு ஆர். கருமலையான் அளித்த சிறப்புப் பேட்டியில் குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வருமாறு: நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் அமலாக்கம் மேலும் மேலும் தீவிரமடைந்துள்ள நிலை யில், இந்தியாவில் தொழி லாளர்களின் உண்மை ஊதியம், வேலைவாய்ப்புக்கான சூழலும் வேலைவாய்ப்பின் தரமும் மாறியுள்ள நிலை, பணி நிலைமைகள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆகிய மூன்று அம்சங்கள் மிகப்பெரும் ஆய்வுக்கு உரியவையாக மாறியுள்ளன.

‘நெகிழ்வுத்தன்மை’ என்றால் என்ன?

சமீபகாலமாக “நெகிழ்வுத்தன்மை யுடன் கூடிய உழைப்புச் சந்தை” என்ற பதத்தை முதலாளி வர்க்கம் முன்வைக் கிறது. இதன் பொருள் என்னவென்றால் உழைப்புக்கும் மூலதனத்திற்கும் இடையிலான உறவில் உழைப்புக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சிற்சில அம்சங்களையும் முற்றாக நீக்குவது; சட்டப்பூர்வமான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலமாக உருவாக்கப் பட்டுள்ள உழைப்புக்குச் சாதகமான பாதுகாப்பு அம்சங்களை வெட்டி யெறிவது என்பதுதான். இதன் நுட்பமானப் பொருள், எந்தத் துறையிலும் தொழிலாளர்களை முதலாளிகள் தங்கள் இஷ்டத்திற்கு அமர்த்துவது, துரத்துவது என்ற கொள்கையை ஈவிரக்கமின்றி அமலாக்குவது என்பதுதான். நெகிழ்வுத்தன்மையுடன் கூடிய உழைப்புச் சந்தை என்பதை பல்வேறு வழிகளில் முதலாளித்துவம் அமலாக்கு கிறது. காண்ட்ராக்ட்மயம், நிறுவனத் திற்கு வெளியில் வேலைகொடுத்து வாங்குவது (அயல்பணி - அவுட் சோர்சிங்), தினக்கூலி முறை தீவிரம், நிரந்தர ஊழியர்கள் செய்யும் அதே வேலையை தற்காலிக ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் தொழில் பழகுநர்கள் மூலமாக செய்து கொள்வது, வீட்டிலிருந்தே வேலை போன்ற புதிய முறைகளை கண்டு பிடித்து, தொழிலாளர்களின் உழைப்பை குறைந்த கூலிக்கும் மிக அதிக நேரத்திற்கும் உறிஞ்சுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

‘பணித் திறனை’ அதிகரித்துக் கொள்ளுங்கள்

பணிப்பாதுகாப்பு என்பது தற்போது மறுக்கப்பட்ட ஒன்றாக மாறியிருக் கிறது. அதற்கு பதிலாக, எந்தநேரத்தி லும் எந்த தன்மை கொண்ட வேலையை யும் செய்வதற்கான திறனை வளர்த்துக் கொள்வது என்ற இடத்திற்கு தொழி லாளர்களை முதலாளித்துவம் தள்ளி யிருக்கிறது. “பணிப்பாதுகாப்பு” என்பதை மாற்றி “பணித்திறன் அதி கரிப்பு” என்பதாக தற்போது முத லாளித்துவ உழைப்புச் சந்தையில் குறிப் பிடப்படுகிறது. இதன்பொருள், ஒரு முதலாளி, ஒரு ஊழியருக்கு அல்லது தொழிலாளிக்கு எந்தவொரு நீண்ட கால வேலைப் பாதுகாப்பையும் வழங்க மாட்டார் என்பதுதான். அதற்கு பதி லாக சம்பந்தப்பட்ட தொழிலாளி தனதுதிறனை வளர்த்துக் கொண்டு, வேறுவேறு வேலைகளை தேடிக்கொள் வதற்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொள்ள வேண்டும்; ஒரு நிறுவனத்தில் வேலை பறிக்கப்பட்டால் வேறொரு நிறுவனத்திற்கு சென்றுகொள்ளலாம்; அல்லது திறந்தவெளி உழைப்புச் சந்தையில் தனது புதிய திறனுக் கேற்றவாறு வேலையைத் தேடிக்கொள்ளலாம். இதன்மூலம், பணிப்பாதுகாப்பு என்ற சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டு, முற்றிலும் நிரந்தரமற்ற பணி, முற்றிலும் உத்தரவாதமற்ற பணி, முற்றிலும் உத்தரவாதமற்ற ஊதியம் அல்லது கூலி, முற்றிலும் உத்தரவாதமற்ற எதிர்காலம் என்ற நிலைக்கு தொழிலாளர்களை முதலாளித்துவம் தள்ளியிருக்கிறது. “பணித்திறன் அதிகரிப்பு” என்ற இந்த புதிய விவாதம், சமீபகாலமாக ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மையமான இடத்திற்கு வந்துள்ள பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பல துறைகளில் தானியங்கி முறை, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்களால் இயக்குதல் போன்ற புதிய முறைகள், உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் நடைமுறைகளில் மனிதர்களை வெளியேற்றிவிட்டு இயந்திரங் களை பயன்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை முதலாளித்துவத்திற்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இது தொழிலாளி வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பை கடும் தாக்குதலுக்குள்ளாக்கியிருக்கிறது. 


பலவந்தமாக நீக்கப்படும் ‘குறைந்தபட்ச ஊதியம்’

மேலும், “பணித்திறன் அதிகரிப்பு” என்ற புதிய கோட்பாடு, ஏற்கெனவே சட்டப்பூர்வ மாக உறுதிசெய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்ற வருமானப் பாது காப்பையும் பலவந்தமாக நீக்குகிறது. ஏற்கெனவே ஆளும் வர்க்க அரசுகளின் கொள்கைகள், சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்ற கோட்பாட்டை முறையாக அமலாக்காததன் விளைவுகளை தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதுவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. 


முற்றிலும் முறைசாரா பண்டமாக ‘உழைப்பு’

மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடை யிலான மோதலில் நவீன தாராளமய அரசுகள் மூலதனத்தின் கரங்களை மேலும் மேலும் வலுப்படுத்துகின்றன; உழைப்பின் கரங்களை கடுமையாக பலவீனப்படுத்துகின்றன. இதன் விளைவு, உழைப்பின், உழைப்பாளிகளின் பேரம் பேசும் சக்தி குறி வைத்து தாக்கப்படுகிறது. குறிப்பாக, முறைசார் வேலை படிப்படியாக குறைக்கப்பட்டு, முற்றிலும் முறைசாராத பண்ட மாக தொழிலாளியின் உழைப்பு என்பது மாற்றப் பட்டு வருகிறது. அப்போதுதான் பெரும் கார்ப்ப ரேட்டுகளின் சுரண்டலுக்கு ஏற்றவாறு குறைந்த கூலிக்கு தொழிலாளியின் உழைப்பு கிடைக்கப் பெறும்; இதற்கான திட்டமிட்ட நடைமுறைகளை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. இதன்நோக்கம், மிக அதிகப்படியான உபரி உழைப்பை தொழிலாளியிடமிருந்து உறிஞ்சுவது என்பதுதான். 

90சதவீதம் முறைசாரா வேலைகள்

1990களில் இந்தியாவில் பொருளாதார நவீன தாராளமய கொள்கைகள் அமலுக்கு வந்த பிறகு இதுவரையிலும் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்புகளில் 90சதவீதம் முறைசாரா வேலைகள்தான். இதன்விளைவாக, தொழிலாளிக்கு ஏற்கெனவே கிடைத்துவந்த பாதுகாப்பு அடித்துநொறுக்கப்பட்டுள்ளது. முறைசாரா உழைப்பு என்பது முற்லும் மிக மிகக் குறைந்த கூலி உழைப்பே ஆகும். இதைத்தான் மிகப்பெரும் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் விரும்புகின்றன. இந்தியாவில் தொழிற்சாலைகள் சர்வே 2017 - 18ன்படி, மொத்தமுள்ள உற்பத்தி சார் தொழிற்சாலைகளில் 6.02 கோடி தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள்; அவர்களில் 1.23 கோடி தொழிலாளர்கள்தான் முறைசார் உற்பத்தி துறைகளில் பணியாற்றுகின்றனர். கிட்டத்தட்ட 80 சதவீதம் தொழிலாளர்கள் முற்றிலும் முறை சாரா பிரிவுகளில்தான் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பொருள் உற்பத்தியில் 40சதவீதம் முதல் 70சதவீதம் வரை முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பால் உருவானவையே. 


அதிகரிக்கும் காண்ட்ராக்ட் மயம்

அதேபோல, அனைத்து உற்பத்தித் துறை களிலுமாக காண்ட்ராக்ட்மயம் என்பது மிகப்பிர தான பிரச்சனையாக மாறியுள்ளது. முன்பெல்லாம், குறிப்பிட்ட சீசன்களுக்கான உற்பத்தித் துறைகளில் மட்டும் தான் காண்ட்ராக்ட்மயம் இருந்தது. தற்போது அந்த வேறுபாடு இல்லை. நிரந்தரமான தேவை கொண்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளிலும் முற்றிலும் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் நியமிக்கப்படுவது தீவிரமடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த உழைப்புப் படையில் 1997-98 ல் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதமாக இருந்தது; 2017-18ல் இது 36.4 சதவீதமாக அதிகரித்தது. நிரந்தர தன்மைவாய்ந்த உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் கூட காண்ட்ராக்ட்மயம் அதி கரித்துள்ளது. காண்ட்ராக்ட் தொழில்களுக்கான பாதுகாப்பு விதிகளையும் கூட, சமீபத்திய புதிய தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களின் மூலம் ஆட்சியாளர்கள் காலி செய்துவிட்டனர். புதிய தொழில்நுட்ப மாற்றங்கள், ஆளும் வர்க்கங்களின் மூலதனத்தின் நலன்களை பாதுகாப்பதற்கான கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் உழைப்பு அதிகமாக தேவைப்படும் பழைய வடிவத்திலான உற்பத்தி முறைகள் மாறுகின்றறன. நவீன இயந்திரங்கள் மற்றும் ரோபோக்கள் மூலமாக உற்பத்தியை மேற்கொள்வது என்ற நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது. மாமேதை காரல்மார்க்ஸ் நூறு ஆண்டு களுக்கு முன்பு தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டது போல, “பொருள் உற்பத்தி நடைமுறையின் முதன்மையான செயல்பாட்டாளராக தொழிலாளி இருந்த நிலை மாறி, அந்த உற்பத்தி நடை முறையின் ஒரு ஓரத்தில் அவர் நிறுத்தப்படுகிற நிலைமை உருவாகும்” என்பது இன்றைக்கு நடைமுறையாக மாறியிருக்கிறது.


‘கிக் பொருளாதாரம்’

இதன் ஒரு பகுதியாக ‘கிக் பொருளா தாரம்’ என்று அழைக்கப்படும்- எவ்வித பணிப்பாது காப்பும் இல்லாத, எவ்வித நிறுவனத்தின் சட்டப்பூர்வ ஊழியராக அல்லாத, ஆனால் அந்த நிறுவனத்தின் லாபத்திற்காக உழைப்பைச் செலுத்துகிற ஒரு படையை முதலாளித்துவம் உருவாக்கியிருக்கிறது. இவை தவிர தொழில் பழகுனர்கள் என்ற பெயரிலும், குறிப்பிட்ட காலத்திற்கான வேலை வாய்ப்பு என்ற பெயரிலும் ஆளும் வர்க்க அரசுகள் புதிய வடிவிலான உழைப்புச் சுரண்டல் முறை களை உருவாக்கியுள்ளன. சுயவேலைவாய்ப்பும், நாள் முழுவதும் உழைப்பைச் செலுத்தினாலும் கையில் எதுவும் மிஞ்சுவதில்லை என்ற நிலையை நோக்கி மக்களைத் தள்ளியுள்ளது. சுமார் 60சதவீதம் மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள னர். இதையும் சுயவேலைவாய்ப்பு என்ற சட்டகத் திற்குள் அடைத்துள்ளனர் ஆட்சியாளர்கள். ஏற்கெனவே அரசுத் துறையில் உள்ள எந்த வொரு ஊழியர்க்கும் தொழிலாளிக்கும் பாது காப்பு இல்லை என்ற நிலை தீவிரமடைந்துள்ளது.

மொத்தத்தில் மாமேதை மார்க்ஸ் சொன்னது போல, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை முற்றிலும் உறிஞ்சப்பட்ட, கொடிய சுரண்ட லுக்குள்ளாக்கப்பட்டு சக்கைகளாக வெளி யேற்றப்படும் தன்மை கொண்டதாக மாற்றப் பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் முந்தைய காலத்தை போல் அல்லாமல் தற்போது பல பிரிவுகளாக சிதறடிக்கப்பட்டுள்ள தொழிலாளி வர்க்கத்தை ஒட்டுமொத்தமாக ஒன்றுபடுத்துகிற பெரும் கடமை, தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு இருக்கிறது. அந்தப் பணியை எப்படி வலுவாக முன்னெடுத்துச் செல்வது என சிஐடியு அகில இந்திய மாநாடு விவாதிக்கும். இவ்வாறு ஆர்.கருமலையான் விவரித்தார்.

17/01/2023 செயற்குழு கூட்ட முடிவுகள்

 *தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்*

பதிவு எண் VGR 278 

*தமிழ் மாநிலம்*


அன்பார்ந்த தோழர்களே


TNTCWU தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 17/01/2023 மாலை 06:00 மணியளவில் ஆன்லைன் ZOOM காணொளி வாயிலாக மாநில தலைவர் தோழர்.C.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயற்குழுவில் BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர்.S.செல்லப்பா அவர்கள் கலந்து கொண்டார். 


செயற்குழுவில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் என மொத்தம் 19 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட விசயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன


1. புதிய மாநிலச் செயலர் தேர்வு

2. ஒப்பந்த தொழிலாளர்கள் பல்வேறு பிரசனைகளும் தலைமை பொது மேலாளருடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளும்

3. பிற விசயங்கள் 


புதிய செயலர் தேர்வு

தோழர்.C. வினோத் குமார் அவர்கள் நீலகிரி CITU மாவட்ட செயலராக பொறுப்பேற்றுள்ள காரணத்தால் தோழர் M. சையத் இத்ரீஸ் TNTCWU சங்கத்தின் புதிய மாநில செயலராக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.10 வருட காலம் சிறப்பாக செயல்பட்ட தோழர் வினோத்குமார் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 


 பேச்சு வார்த்தை

01/12/2022 மற்றும் 11/01/2023 அன்று தலைமை பொது மேலாளர் திரு C. வினோத் அவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தை விவரங்கள் தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் பற்றியும் விரிவாக விளக்கப்பட்ட்து. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சம்பளம் வழங்கப்படாத பிரச்னை, குறைவான சம்பளம் வழங்கப்பட்ட பிரச்னை, பில்களை பெற்றுக் கொண்டு ஒப்பந்ததாரர் சம்பளம் கொடுக்காத பிரச்னை, அதிக தொகைக்கு டெண்டர் எடுத்தும் குறைவான சம்பளம் கொடுக்கும் பிரச்னை, EPF, ESI பிரச்னை போன்ற பல்வேறு பிரச்னைகள் மறுபடியும் விவாதிக்கப்பட்டது. பிரச்னைகளின் மீது தோழர்.S.செல்லப்பா, AGS அவர்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறி வழிகாட்டினார். 

அனைத்து பிரச்னைகளையும் 31/01/2023 க்குள் மகஜராக தயார் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.


 BSNL ஊழியர் சங்கத்தோடு ஆலோசித்த பின்னர் பிப்ரவரி முதல் வாரத்தில் (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகங்களுக்கு மகஜர் அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.



பிற விசயங்கள் 

 மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து ஏப்ரல் 5, 2023 அன்று தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளும் தர்ணா போராட்டத்தில் TNTCWU சங்கமும் கலந்து கொள்ளும். ஒப்பந்த ஊழியர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.


 அனைத்து கிளைச் சங்கங்களும் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் அனைத்து உறுப்பினர்களிடமும் 2023 ஆண்டு வரையிலான சந்தா வசூல் செய்திட வேண்டும்.


அனைத்து மாவட்டங்களிலும் கிளை மாநாடு மற்றும் மாவட்ட மாநாடுகள் நடத்தி சங்கத்தினை பலப்படுத்த வேண்டும்.


மேலும் திருச்சி ஒப்பந்த ஊழியர் மறைந்த தோழர் குணசீலன் அவர்களின் குடும்பத்தாருக்கு மாத பென்சன் 18,618/- பெற்றிட போராடிய மாநில சங்கத்திற்கும் குறிப்பாக மாநில தலைவர் தோழர்.C.பழனிச்சாமி அவர்களுக்கும்தோழர் S. செல்லப்பா வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். 


செயற்குழு முடிவுகளை முழுமையாக அமுல்படுத்துவோம்.


தோழமையுடன்


C.பழனிச்சாமி

மாநில தலைவர்


M.சையத் இத்ரீஸ்

மாநிலச் செயலர்


 

ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்னைகள் சம்பந்தமாக பேச்சு வார்த்தை

ஒ்ப்பந்த தொழிலாளர்களின் சம்பள நிலுவை ,  குறைவான சம்பளம் உட்பட பல்வேறு   பிரச்னை சம்பந்தமாக தமிழ்மாநில முதன்மை பொதுமேலாளர் அவர்களுடன்  இரண்டாம் சுற்று பேச்சு வார்த்தை 11- 01 - 2023 அன்று நடைபெற்றது.

 பேச்சு வார்த்தையில்  தோழர்.S.செல்லப்பா, AGS, தோழர்.A.பாபு ராதாகிருஷ்னன், மாநில தலைவர், தோழர். P.ராஜூ மாநில செயலர், தோழர். K.ஸ்ரீனிவாசன், மாநில உதவி உதவிச்செயலர் மற்றும் தோழர். C.பழனிச்சாமி, TNTCWU  தலைவர் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

ஏற்கனவே 01-12-2022 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில்  ஒப்பந்த ஊழியர்களுக்குண்டான  சம்பள நிலுவை, பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்ட குறைவான சம்பளம், நீதி மன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது, கராறாக சம்பளத்தை உரிய நேரத்தில் வழங்குதல்,  EPF ESI  சட்டபூர்வ விதிகள் அமுலாக்கம் ஆகிய பிரச்னைகள்   விவாதிக்கப்பட்டிருந்தன.   பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை மாநில சங்கங்களின் சார்பில் தயாரிக்கப்படிருந்த பட்டியலை கொடுத்து  விவாதிக்கப்பட்டது.  அந்தப் பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ் மாநில முதன்மை  பொது மேலாளர் உறுதி அளித்திருந்தார். 

11-01-2023 நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் மறுபடியும் அதே பிரச்னைகள் எடுத்து கூறப்பட்டன.  குறிப்பாக கோவை துப்புறவு பணியாளர்கள் சம்பள பாக்கி,  நீலகிரி சம்பள குறைவு அனுமதிக்கப்பட்ட பின்பும் வழங்கப்படாமை,   மதுரை நிலுவையில் உள்ள பில் பிரச்னை, ஈரோடு மற்றும்  சென்னை மாநில அலுவகத்தில் ஒப்பந்தகாரர் பில் வாங்கி விட்டு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்காமை போன்ற பிரச்னைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்ட்து.

ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான  அனைத்து பிரசனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 அனைத்து மாவட்டங்களில் உள்ள    ஒப்பந்த ஊழியர்களுக்குண்டான  சம்பள நிலுவை, வழங்கப்பட்ட குறைவான சம்பளம்,  EPF , ESI  சட்டபூர்வ விதிகள் அமுலாக்கம் மற்றுமுள்ள முக்கியமான   அனைத்துப் பிரச்னைகளையும்  தொகுத்து அனுப்புமாறு மாவட்டங்களுக்கு  மாநில நிர்வாகத்திலிருந்து கடிதம்  எழுதப்பட்டுள்ளதாக  தெரிவித்தார். மேலும் சம்பளம் வழங்குவத்ற்கான திட்டத்தையும் தெரிவிக்குமாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மாவட்டசங்கள் அப்பகுதி மாவட்ட் நிர்வாகங்களுடன் பேச்சு வார்த்தை நட்த்தி பிரச்னைகளை பட்டியலிட துணை புரிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அனைத்து விவரங்களும் மாவட்டத்திலிருந்து  வந்தவுடன்  அனைத்து பிரசனைகளையும் குறிப்பிட்ட கால வரையறைக்குள்  தீர்த்து வைக்கப்படும் என்று உறுதி அளித்தையொட்டி பேச்சு வார்த்தை முடிவுற்றது.



நமது பேச்சு வார்த்தை அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களின் பல்வேறு பிர்சனைகள் சம்பந்தமாக மாநில நிர்வாகம் மாவட்டங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல்   நமது சங்கத்திற்கு அளிக்க்ப்பட்டது. 

தமிழ் மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள  கடித்ததின் முக்கிய உள்ளடக்கம்

1. மாவட்டங்களில் ஒப்பந்தகாரர் மூலம் பணி புரிகின்ற ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும்  சம்பள நிலுவை  (NON PAYMENT    )  ,   வழங்கப்பட்டுள்ள சம்பளத்தில்  குறைவு (SHORT PAYMENT )  , மற்றும் சட்டப்பூர்வ சலுகைகளான  EPF , ESI ஆகியவை வழங்கப்படாமை போன்ற  பிரச்னைகள் மீது BSNLEU   உட்பட பிற சங்கங்களிடமிருந்தும்   புகார்கள் வந்துள்ளன. 

2. சென்னை உயர் நீதி மன்றத்தின் 28 04 2021 தீர்ப்பின் அடிப்படையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கும்படி DEPUTY CHIEF LAOUR COMMISSIONER அவர்கள் எழுதிய கடிதமும் வந்துள்ளது.

3.   இது சம்பந்தமாக பழைய ஒப்பந்த முறையில் ( MAN POWER CONTRACT )  01 01 2019 முதல் ஒப்பந்தகாரருக்கு வழங்க வேண்டிய தொகை, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை விவரங்களை மாவட்டங்கள் அளிக்க வேண்டும்.

4. மேலும் EPF ESI  நிலுவை விவரங்களையும் அளிக்க வேண்டும்

5. தற்போதுள்ள அவுட்சோர்சிங் சம்பள பாக்கி விவரத்தையும் தெரிவிக்க வேண்டும். 

6. முதன்மை பணியாளர் ( Principal Employer ) என்ற அடிப்படையில் BSNL  நிர்வாகத்திற்கு  உரிய நேரத்தில் ஒப்பந்த தொழிலாளர்க்கு சம்பளம் அளிக்க  வேண்டிய பொறுப்பும் சட்ட பூர்வ சலுகைகளயும் அமுல் படுத்த வேண்டிய கடைமைகளும் உள்ளது. 

7. எல்லா மாவட்ட நிர்வாகங்களும்  குறிப்பிட காலத்தில்  சம்பளமும் சட்ட பூர்வ சலுகைகளை அமுல்படுத்துதலை கண்காணிக்க வேண்டும்

8. தொழிற்சங்கங்களும் மத்திய DEPUTY CHIEF LABOUR COMMISSIONER  கேட்டுக் கொண்டபடி ஒப்பந்தகார்ருக்கும் ஒப்பந்த தொழிலாளர்க்கும் உரிய நேரத்தில் பட்டுவாடா செய்வதற்கான திட்டம் வகுக்க வேண்டும்.

9. BSNL நிறுவனத்திற்குரிய கடைமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான  திட்டங்களை  மாவட்ட நிர்வாகங்கள் உடனே தெரிவிக்க வேண்டும்.

கடிதத்தில் மாவட்டங்கள் அளிக்க வேண்டிய விவரங்களை படிவமாக வெளியிட்டுள்ளது. படிவம் தனியாக  தரப்பட்டுள்ளது. அவை அனைத்துப் பிரச்னைகளையும் உள்ளடக்கியுள்ளது.  

ஒவ்வொரு மாவட்டத்திலும்  பிரச்னைகள் வேறுபட்டிருக்கின்றன. எனவே மாவட்ட சங்கங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைகளை மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். மாநில நிர்வாகம் கேட்டுள்ள விவரங்களை அனுப்புவதற்கு துணை புரிந்திட வேண்டும் .  தங்கள் மாவட்ட ஒப்பந்த தொழிலாளர் பிரச்னைகள் தீர்வு கண்டிட உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்


P.ராஜு    

மாநிலச் செயலர் 

BSNLEU.                                                C. பழனிச்சாமி                                   மாநிலத்தலைவர்                                                    TNTCWU

13-01-2023

 

*ஒப்பந்த தொழிலாளி குடும்பத்திற்கு மாத பென்சன் ரூ 18618/-*

வெற்றி பெற்ற தொடர் முயற்சி.....
அவுட் சோர்சிங்  ஒப்பந்த முறையில்   திருச்சி தொலை தொடர்பு மாவட்டத்தில்  பணியாற்ரி வந்தவர் தோழர் குணசீலன் (  வயது 42 )  என்ற ஒப்பந்த தொழிலாளி. 22 06 2020  அன்று பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது மின்சரம் தாக்கி தொலைபேசி கம்பத்தில் இருந்து  கீழே விழுந்து அகால மரணமடைந்ததையும்  அவருடைய குடும்பத்திற்கு ESI Funeral Expenditure , .  EPF Deposit , EPF மாத  Pension Rs 4 068 பெற்றுக் கொடுத்ததையும் தெரிவித்திருந்தோம்.              பணியில் இருக்கும் போது விபத்தின் காரணமாக உயிரிழந்த காரணத்தால் அவருடைய குடும்பத் திற்கு ESI Pension   ( Dependent Benefit ) வேண்டும் என்று மனு செய்தோம். நீண்ட முயற்சிக்குப் பின்னர் ESI பென்ஷன் அனுமதிக்கப்பட்டு விட்டது . அவருடைய மனைவிக்கு தினசரி 207.86  ரூபாயும் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கும் தலா  ௹பாய் 138.57 அனுமதிக்கப்பட்டு உத்தாவு வெளியாகி உள்ளது. குடும்பத்திற்கு மொத்தம் தினசரி ரூபாய் 485  , மாதம் ESI பென்கள்  ௹பாய் 14  550   .                                              23.6-2020 முதல் நிலுவைத் தொகையாக ரூபாய் 4, 35,000 கிடைக்கும், EPF பென்சன் மற்றும் ESI பென்சன் சேர்த்து மாதம் ரூபாய் 18 618 கிடைக்கும் . தற்போது அந்தக் குடும்பத்திற்கு EPF Deposit Linked Insurance க்காக முயற்சி செய்து வருகிறோம். விரைவில் பெறுவோம்.  நம்மை நம்பினாரை நாம் கைவிடுவதில்லை

இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றிட புத்தாண்டில் சபதம் ஏற்போம்


 

 திருச்சி 29 12 2022 கூட்டம் தோழர்களே வணக்கம்


நிரந்தர வழக்கில் உள்ள 37 தோழர்களின் அவசர கூட்டம் திருச்சியில் தோழர் R. சிரில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தோழர் N. E. ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.


தோழர் C. பழனிச்சாமி மாநில தலைவர் வழக்கு விபரம், தற்போது வழக்கின் நிலை சங்கதின் செயல்பாடுகள், நமது கடமை, போன்ற வழிகாட்டுதல்கலை விரிவாக பேசினார்.


தோழர்கள் சீர்காழி R.ஸ்ரீனிவாசன், தஞ்சை கோபாலகிருஷ்ணன், திருச்சி தங்கபூமி, சக்திவேல், ராமசந்திரன், தனபால், நகர்க்கோயில் கண்ணன், RGM TTC சென்னை கணேசன், விருதுநகர் பண்டிராஜன், மற்றும் திருச்சி முருகன், விவாதத்தில் பங்கெடுத்தனர். தோழர்கள் சிரில் மற்றும் நித்தியானந்தம், வழகின் ஸ்டேட்டஸ், நமது பங்கு என்ன என்பதை கூறினார்கள் முடிவில் TNTCWU மாநில பொறுப்பாளர் தோழர் சையத் இதிரிஸ் சங்க செயல்பாடுகள், நமது கடமைகள், என்ன என்பதை சிறப்பித்து பேசினார்கள். முடிவில் தோழர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்கள். கூட்ட முடிவுகள் 1 வழக்கை விரைவில் நடத்தி தீர்ப்பு பெற முயற்சிக்க வேண்டும் 2 நமதுவழக்கறிஞரை நேரில் சந்திக்க வேண்டும் . அப்பொழுது அவரிடம் வழக்கு கட்டணத்தில் முதல் தவணை அளிக்க வேண்டும்- வழக்கில் உள்ள அனைவரும் வழக்கு கட்டணம் முதல் தவணையான ரூபாய் 5 000 செலுத்த வேண்டும், 3 . வழக்கில் உள்ள 37 பேரின் சார்பில் ஏற்கனவே உள்ள 4 பேர் குழுவில் தோழர் சையத் இத்ரிஸ் மற்றும் திருச்சி கும்பகோணம் விருதுநகர் கோவை சென்னை தஞ்சாவூர் தலா ஒருவர் இணைக்கப்பட்டுள்ளனர், மேலும் சம்பந்தமாக கூட்டம் காoணாளி மூல மாக ஜனவரியில் நடைபெறும்

*BSNLEU calls on the employees to organise Day-long Black Badge wearing and Lunch Hour Demonstrations on 17-08-2022.*

It is shocking to know that, the Government and the BSNL Management are taking serious steps to retrench another 35,000 employees through VRS. The Government and the Management are also trying to convert BSNL employees into slaves, with threatenings to dismiss under Rule 56(J) and making them to work up to 12 hours per day. Under these circumstances, the All India Centre of BSNLEU has decided to organise the following agitational programmes on *17-08-2022. *

*(1) Day-long Black Badge Wearing.*

*(2) Lunch Hour Demonstrations. *

The CHQ of BSNLEU calls upon all the circle and district unions to organise the above two programmes successfully by mobilising the maximum number of employees, pensioners and contract workers. Let us send our strongest protest to the Government and the Management.
Regards.
*-P.Abhimanyu,GS.*

 


 BSNLEU-AIBDPA-TNTCWU ஒருங்கிணைப்பு குழு ஈரோடு மாவட்டம் சார்பாக பெருந்துறையில் 11/08/2022 அன்று நடைபெற்ற 75 வது சுதந்திர தின பவள விழா சிறப்பு கருத்தரங்கத்தில் மாநில செயலர் தோழர்.C. வினோத் குமார்




 


வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்

 



 *தொலை தொடர்பில் ஒரு ”மாயா பஜார்* ”


2022. ஜூலை மாதத்தில் 5G அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. 72GHz அலைக்கற்றை ஏலம் விடப்படும் என ஏலத்திற்கு முன்பு அரசாங்கம் கூறியது. அந்த 72GHz அலைக்கற்றையின் அடிப்படை விலையாக 4.3 லட்சம் கோடி ரூபாய்கள் என அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.


தற்போது 5G அலைக்கற்றை ஏலம் நிறைவு பெற்று விட்டது. 4.3 லட்சம் கோடி ரூபாய்கள் என அரசாங்கம் நிர்ணயித்திருந்ததற்கு பதிலாக, அரசாங்கத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய்கள் மட்டுமே கிடைத்துள்ளது. தற்போது, இந்த ஏலத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக, முன்னாள் தொலை தொடர்பு அமைச்சர் திரு ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள தற்போதைய தொலை தொடர்பு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், 5G அலைக்கற்றையின் ஒரு பகுதி மட்டுமே விற்றுள்ளதாகவும், விற்கப்படாத மீதமுள்ள அலைக்கற்றைகள், அரசாங்கத்திடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


திரு அஷ்வினி வைஷ்ணவின் வாதம் தர்க்க ரீதியாக சரியாக இருக்கலாம். ஆனால் 72GHz அலைக்கற்றை, முழுவதும் ஏன் விற்கப்படவில்லை என்பது தான் தற்போதுள்ள கேள்வி? அடிப்படை விலையான 4.3 லட்சம் கோடி ரூபாய்களில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசாங்கத்திற்கு கிடைத்தது ஏன்? இவற்றிற்கு அரசாங்கம் பதில் தர முடியுமா? நிச்சயமாக முடியாது.


முன்னர், ஐடியா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல், டாடா டெலிசெர்விசஸ், டெலினார் இந்தியா உள்ளிட்ட பல தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்தன. இதில் பெரும்பான்மையானவை, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பணபலத்தால் நசுக்கப்பட்டு விட்டன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன, அல்லது மற்ற நிறுவனங்களோடு இணைக்கப்பட்டு விட்டன. தற்போது 3 தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் வொடோபோன் மரணப்படுக்கையில் உள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மட்டுமே தொலைதொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கடந்த காலத்தை போல, பல தொலை தொடர்பு நிறுவனங்கள் இருந்திருந்தால், முழுமையான அலைக்கற்றைகளும் விற்கப்பட்டிருக்கும். அரசாங்கத்திற்கும், நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையான 4.3 லட்சம் கோடி ரூபாய்களுக்கு மேல் கிடைத்திருக்கும்.


72GHz அலைக்கற்றை முழுமையாக விற்கப்படாததும், அடிப்படை விலையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசாங்கத்திற்கு கிடைத்ததும், மோடி அரசாங்கத்தின் ரிலையன்ஸ் ஜியோ ஆதரவு கொள்கையின், நேரடி விளைவே ஆகும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு ஆதரவாக, அரசாங்கமும், TRAIயும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ரிலையன்ஸ் ஜியோவின் விதி மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பிய, அன்றைய தொலை தொடர்பு துறையின் செயலாளர் திரு J.S.தீபக், மோடி அரசாங்கத்தால் எவ்வாறு வெளியேற்றப்பட்டார் என்பதை நினைவு படுத்துகிறோம்.


 *தோழர் P.அபிமன்யு* *பொதுச்செயலாளர்*

 


 தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம்


செயற்குழு முடிவுகள்


நமது சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 

27.07.2022 அன்று காணொழி காட்சி மூலம் தலைவர் தோழர் 

C.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. 

தோழர்கள் S.செல்லப்பா அகில இந்திய உதவிப் பொதுச் செயலர், BSNLEU, தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர், BSNLEU ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 


கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன:-


நமது போராட்டத்தை யொட்டி 6 கோடியே 42 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனாலும் சம்பள பிரச்னை தீரவில்லை. எனவே சம்பள பாக்கி விவரங்களை உடனடியாக மாவட்ட சங்கங்கள் இறுதிப்படுத்தி மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். 

நீதிமன்றம் செல்ல விருப்பம் உள்ள தோழர்களின் பட்டியல் தயார் செய்து அனுப்ப வேண்டும்.வழக்கு நிதியும் உறுதி செய்ய வேண்டும்.


2. EPF, ESI பிரச்சனைகளை அனைத்து மாவட்டங்களும் விவரங்களுடன் தயாரித்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும்.


3. மாநில மாநாட்டை நவம்பர் மாதம் ஈரோட்டில் சிறப்பாக நடத்துவது என்றும் அதற்கு முன்னர் கிளை மாவட்ட மாநாடுகளை நடத்தி முடிக்க வேண்டும். மாவட்ட மாநாடுகளை நடத்துவதற்கான பொறுப்பாளர்கள் தீர்மானிக்கப்பட்டது. தோழர்கள் C.பழனிச்சாமி, C.வினோத், M.சையத் இத்திரிஸ், M.பாஸ்கர் ஆகிய தோழர்கள் பொறுப்பேற்று மாவட்ட மாநாடுகளை நடத்த வேண்டும். மையத்தில் பேசி தோழர்களுக்கு மாவட்டங்கள் தெரிவிக்கப்படும்.


4. மறைந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு EPF, ESI சலுகைகளை பெற்றுத்தர வேண்டும்.


5. அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு முடிவுக்கேற்ப தமிழ்நாட்டில் ஐந்து மையங்களில் நடைபெறும் கருத்தரங்கில் பெருவாரியான ஒப்பந்த தொழிலாளர்களை கலந்து கொள்ள வேண்டும்.  


6. தோழர் R.சிரில்ராஜ் அவர்கள் மாநிலப் பொருளாளர் தோழியர் பிரதீபாவிற்கு உதவியாளாராக செயல்படுவார்.


மாநில நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி நீலகிரி மாவட்டத்தில் முன்பு குறைவான சம்பளம் பெற்றவர்களுக்கு தற்போது நிலுவை சம்பளம் அனுமதிக்கப்பட்டதற்கும் சென்னையில் விடுபட்ட சம்பளமான ரூபாய் 8 லட்சம் பெற்றுத்தந்ததற்கும் BSNL ஊழியர் சங்கம் மற்றும் அதன் அகில இந்திய உதவிச் செய்லர் தோழர் S.செல்லப்பா மாநிலத் தலைவர் தோழர் A.பாபு ராதாகிருஷ்னண், மாநிலச் செயலர் தோழர் P.ராஜும் மாவட்ட செயலர் தோழர் K.சீனிவாசண் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 


மத்திய அரசு மற்றும் BSNL நிர்வாக்த்தின் கடுமையான தாக்குதலை எதிர்த்து தொடர்ந்து போராட வேண்டும் என்றும் அதற்காக சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


தோழமையுடன்


மாநில செயலாளர்

 அரை  சதவீதம் கூட வேலை தராத மோடி அரசு 

நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பாஜக ஆட்சியில், இந்திய இளைஞர்களில் அரை சத விகிதம் பேருக்குக் கூட வேலை வழ ங்கப்படவில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த இணை அமைச்சரும், பிரதமர் அலுவலக இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், ‘‘கடந்த எட்டு ஆண்டுகளாக அரசு  வேலைகளுக்கான ஆர்வம் தடை யின்றி தொடர்ந்தது. ஆனால், பெறப்பட்ட விண்ணப்பங்களில் 1  சதவீதத்திற்கும் குறைவான விண்ண ப்பங்களே வேலைக்கு தேர்ந்தெடு க்கப்பட்டன. 2014-15 முதல் 2021-22 வரை பெறப்பட்ட 22.05 கோடி விண்ணப்பங்களில், 7.22 லட்சம் அதாவது  0.33 சதவிகிதம் மட்டுமே, ஒன்றிய அரசின் பல்வேறு துறை களில் பணி நியமனம் செய்ய பரிந்து ரைக்கப்பட்டுள்ளன’’ என்று கூறியுள் ளார்.


அமைச்சர் பட்டியலிட்ட வேலைவாய்ப்புத் திட்டங்கள்

இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டி ருக்கும் அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க இந்திய அரசு  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது’’ என்று அரசின் பல்வேறு திட்டங்களை யும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுக் கொண்டுள்ளார். பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, ‘‘ஆத்ம நிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா’’ மற்றும் ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘ஸ்மார்ட் சிட்டி மிஷன்’, ‘புத்துணர்ச்சி மற்றும்  நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்’, ‘பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்’, ‘‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி யளிப்புத் திட்டம்’’, ‘‘பண்டிட் தீன்  தயாள் உபாத்யாயா கிராமின் கௌசல்யா யோஜனா’’, ‘தீன் தயாள் அந்தோதயா யோஜனா’, ‘தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்’ போன்றவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் ஜிதேந்திர சிங், வழக்கமான பாஜக அரசின் பல்லவியைப் பாடியுள்ளார். ( பக்கோடா விற்பதும் வேலை வாய்ப்பு என்ற முந்தைய அறிவிப்பை  இந்த திட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை ! )

18 மாதங்களில் 10 லட்சம் நியமனங்கள்?

அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை ‘‘மிஷன்’’ திட்டங்களின் கீழ் பணியமர்த்த பிரதமர்  மோடி உத்தரவிட்டுள்ளதாக ஜூன் 14-ஆம்  தேதி ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பையும் ஜிதேந்திர சிங் சுட்டிக்காட்டியுள்ளார். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை வழங்குவேன் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி,  8 ஆண்டுகளில் இதுவரை வழங்கிய அதிகாரப்பூர்வ வேலைகளின் எண்ணிக்கையே வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம்தான்.

 இந்நிலையில், 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை என்ற மோடியின் புதிய அறிவிப்பு என்னவாகுமோ என்ற கேள்வி இந்திய இளைஞர்களைத் துரத்துகிறது. 

 இது தான் வாயால் வடை சுடுவதோ ?

 அரசு அறிவித்துள்ள புத்தாக்க திட்டம் தொடர்பாக BSNL ஊழியர் சங்கத்தின் கருத்துக்கள் 

))) click here (((


 

 Cabinet approves revival package of BSNL amounting to Rs 1.64 Lakh Cr.

Posted On: 27 JUL 2022 5:16PM by PIB Delhi

Telecom is a strategic sector. Presence of BSNL in telecom market acts as a market balancer. BSNL plays a crucial role in expansion of telecom services in rural areas, development of indigenous technology and disaster relief.


To make BSNL financially viable, the Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi today approved the revival package of BSNL amounting to Rs 1.64 Lakh Cr.


Revival measures approved by the Cabinet focus on infusing fresh capital for upgrading BSNL services, allocating spectrum, de-stressing its balance sheet, and augmenting its fiber network by merging Bharat Broadband Nigam Limited (BBNL) with BSNL.


 


Upgrading BSNL services

Administrative allotment of Spectrum: To improve existing services and provide 4G services, BSNL will be allotted Spectrum in 900/1800 MHz band administratively at the cost of Rs 44,993 Cr through equity infusion. With this spectrum, BSNL will be able to compete in the market and provide high speed data using their vast network including in rural areas.

Financial support for capex: To promote indigenous technology development, BSNL is in process of deploying Atmanirbhar 4G technology stack. To meet the projected capital expenditure for next 4 years, Government will fund capex of Rs 22,471 Cr. This will be a significant boost to development and deployment of Atmanirbhar 4G stack.

Viability gap funding for rural wireline operations: Despite the commercial non-viability, BSNL has been providing wireline services in rural/remote areas to meet the social objectives of the Government. Government will provide Rs 13,789 Cr to BSNL as viability gap funding for commercially unviable rural wire-line operations done during 2014-15 to 2019-20.

Increase in authorized capital: The authorized capital of BSNL will be increased from Rs 40,000 Cr to Rs 1,50,000 Cr in lieu of AGR dues, provision of capex and allotment of spectrum.

 


De-stressing BSNL balance sheet

Debt structuring: Government will provide sovereign guarantee to these PSUs for raising long term loan. They will be able to raise long term bonds for an amount of Rs 40,399 Cr. This will help restructuring existing debt and de-stressing the balance sheets.

Financial support for AGR dues: To further improve the balance sheet, AGR dues of BSNL amounting to Rs 33,404 Cr will be settled by conversion into equity. Government will provide funds to BSNL for settling the AGR/GST dues.

Re-issue of preference shares: BSNL will re-issue preference share of Rs 7,500 Cr to the Government.

 


Augmenting BSNL fiber network

Merger of BBNL and BSNL: To facilitate wider utilization of infrastructure laid under BharatNet, Bharat Broadband Network Ltd (BBNL) will be merged with BSNL. The infrastructure created under BharatNet will continue to be national asset, accessible on a non-discriminatory basis to all the Telecom Service Providers.

 


With these measures, BSNL will be able to improve the quality of existing services, roll out 4G services and become financially viable. It is expected that with the implementation of this revival plan, BSNL will turn-around and earn profit in FY 2026-27.


வீடியோவை காண இங்கு கிளிக் செய்யவும்
 


 

 அன்பார்ந்த தோழர்களே, 


28.07.2022 அன்று கருப்பு அட்டை அணிந்து, மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்கின்ற  AUABயின் போராட்டம், மீடியாக்களில் வெளியாவதற்கு திட்டமிட வேண்டும்.  


AUABயின் அறைகூவலின் அடிப்படையில், 28.07.2022 அன்று கருப்பு அட்டை அணிந்து, மதிய உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.  இந்த இயக்கத்தினை, அதிகப்படியான மீடியாக்களில் வெளிக்கொணர வேண்டும் என அகில இந்திய AUAB முடிவு செய்துள்ளது.  எனவே, இந்த போராட்டத்திற்கு பத்திரிக்கை நண்பர்களை அழைக்க வேண்டும் என மாநில மற்றும் மாவட்ட செயலளர்களை, மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது. 


ஒரு பத்திரிக்கை செய்தியினை, இன்று மாலைக்குள் AUAB தயாரித்து அனுப்பும்.  இதனை சம்பந்தப்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்து, மீடியா நண்பர்களுக்கு வழங்க வேண்டும்.  


மேலும் இந்த இயக்கத்தில் அதிகப்படியான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை திரட்டி பங்கேற்க செய்து, வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என மீண்டும் ஒரு முறை மத்திய சங்கம் கேட்டுக் கொள்கிறது. 


 *தோழர் P.அபிமன்யு*  *பொதுச்செயலாளர்* .

 மாநிலங்களவை உறுப்பினர் தோழர் டாக்டர் சிவதாசன் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கடந்த 3.5 ஆண்டுகளில் BSNLல் மட்டும் 1.5 லட்சம் பணியிடங்களை ஒழித்துவிட்டதாக கூறியுள்ளார். 

இன்னொரு பொதுத்துறையை சீரழித்ததன் மூலம் லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவுகளை அழிக்கிறது மோடி அரசாங்கம்.

..


 தோழகளே..வணக்கம்..


நமது மாநிலச் செயற்குழு கூட்டம் இணைய வழியாக 27.07.2022 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெறும்..தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.. இணைப்பு அனுப்பிவைக்கபடும்..


தோழமையுடன் 


மாநிலச் செயலாளர்



 

 *BSNLல் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி* 


BSNLல் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் ஆளெடுப்பு தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் Dr. V.சிவதாசன், 21.07.2022 அன்று ராஜ்யசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய் தொலை தொடர்பு துறையின் இணை அமைச்சர் திரு தேவுசின்ஹ் சவுஹான் பதிலளிக்கையில், 31.03.2022 அன்று பணியில் இருந்த BSNL ஊழியர்களின் எண்ணிக்கை 62,208 என தெரிவித்துள்ளார்.

இதில், அதிகாரிகளின் எண்ணிக்கை 32,551 மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 29,657 என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது, 9,169 ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் பதவிகளில், 7,263 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், ஊழியர் பதவிகளில், 4,152 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


 *தோழர் P.அபிமன்யு* *பொதுச்செயலாளர்*

 


 *BSNL loses 5.3 lakh subscribers in May, 2022.*

As per TRAI report, Reliance Jio gained net 31.11 lakh mobile subscribers in May Bharti Airtel added net 10.27 lakh users. Vodafone Idea lost net 7.59 lakh mobile subscribers MTNL lost net 2,665


 

 *BSNL டவர்களை தனியாருக்கு தாரைவார்க்க வெகு வேகமான நடவடிக்கைகளை எடுக்கும், CMD BSNL* 


தேசிய பணமாக்கல் திட்டத்தின் அடிப்படையில், BSNL டவர்களை தனியாருக்கு தாரைவார்க்க, CMD BSNL, வேக வேகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  தேசிய பணமாக்கல் திட்டத்தின் அடிப்படையில், BSNLன் 14,917 மொபைல் டவர்களை தனியாருக்கு தாரை வார்ப்பது என அரசாங்கம், ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது.  இதன் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாநில தலைமை பொது மேலாளர்களுக்கும், 12.07.2022 தேதியிட்ட கடித எண் BSNL CO-CMIN/17(11)/3/2021-CMTS INFRA மூலம், CMD BSNL உத்தரவிட்டுள்ளார். 


பாரத் நெட்டின் 2,80,000 கிலோமீட்டர் நீளமுள்ள கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் என்று அரசாங்கம், ஏற்கனவே முடிவு எடுத்துள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  BSNLன் மொபைல் டவர்களும், கண்ணாடியிழை கேபிள்களும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது என்று சொன்னால், அதுவே BSNL நிறுவனத்திற்கு எழுதப்படும் முடிவுரையாக மாறிவிடும். 


எனவே தேசிய பணமாக்கல் திட்டம் என்ற அடிப்படையில், BSNL நிறுவனத்தின் மொபைல் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும், தனியாருக்கு தாரை வார்ப்பதை, அனைத்து BSNL ஊழியர்களும் தடுத்து நிறுத்த வேண்டும்.


 *தோழர் P.அபிமன்யு*  *பொதுச்செயலாளர்*

 *தொலை தொடர்பு துறையில் அதானி நுழைகிறார்.* 


இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி, தொலை தொடர்பு துறையில் நுழைகிறார்.26.07.2022 அன்று நடைபெற உள்ள 5G அலைக்கற்றை ஏலத்தில் அதானி குழுமம் பங்கெடுக்கும் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.  தொழிற்சாலைகளுக்கான “தனியார் கம்பியில்லா வலைத்தள”த்தை மட்டுமே, அதானி குழுமம் வழங்கும் என்றும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.  எனினும், மொபைல் சேவை வழங்கும் துறையிலும், அதானி குழுமம் ஈடுபடும் என்பது உறுதி. 


 கௌதம் அதானி, ஆளும் பாஜக விற்கு மிக நெருக்கமானவர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு விஷயம்.  பாரத பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவிற்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, அதானி குழுமத்திற்கு, இலங்கையில் ஒரு மின்சார திட்டம் வழங்கப்பட்டதாக, இலங்கை மின் வாரியத்தின் தலைவர் M.C.பெர்னாண்டோ, பாராளுமன்றக் குழுவிடம் சமீபத்தில் கூறியிருந்தார். (14.06.2022 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ்). 


பணபலம் மிக்க அதானி குழுமம், தொலை தொடர்பு துறையில் நுழைவது, ஒரு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம்


 *தோழர் P.அபிமன்யு*  *பொதுச்செயலாளர்*


 

 நமது போராட்டத்தையொட்டி மேற்கண்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் எந்த மாவட்டத்திலாவது ( 01 07 2022 க்குப் பிறகு ) சம்பளம் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரிவிக்கவும். WORK TENDER ( OUTSOURCING TENDER ) மற்றும் WORKERS TENDER தனித்தனியாக குறிப்பிடவும்

 BSNLEU    மாநிலச் செயலர் தோழர்  P ராஜு  செய்தி:     

                                                                                                                                                                                                                                                                 6 கோடியே  42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                     TNTCWU மாவட்ட செயலர்கள் கவனத்திற்கு                                                                                                                                                                                                                                                                            தங்கள் மாவட்ட கணக்கியல் அதிகாரியிடம்  தொடர்பு கொண்டு ஒவ்வொரு வெண்டாருக்கும் எவ்வளவு தொகை என்ற விவரம் கேட்டுப் பெறவும். அந்த தொகை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளமாக செல்வதை உறுதி செய்யவும். பிரச்னை இருந்தால் தொடர்பு கொள்ளவும்


மாநில சங்கம்

போராட்டம் தொடர்பான பத்திரிக்கை செய்திகள்

 



AIBDPA மாநில சங்கம் போராட்ட த்தில் கலந்து கொண்ட தோழா்களின் மதிய உணவுக்காக ரூபாய் 15000/− கொடுக்கப்பட்டது.

 


30/06/2022 அன்று சென்னை தலைமை பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் புகைப்படக் காட்சிகள்













 

BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக தலைமை பொது மேலாளருக்கு ஒப்பந்த ஊழியர்களின் பிரச்னைகள் குறித்து 29/06/2022 அன்று வழங்கப்பட்ட கடிதம்



 

 *உறைநிலையில் BSNLன் 4G.*


சுதந்திர தினத்தன்று, BSNLன் 4G சேவையை, பாரத பிரதமர் துவக்கி வைப்பார் என்றும், அதன் பின், அகில இந்திய அளவிலான 4G சேவையினை, 2022, டிசம்பர் மாதத்தில் BSNL துவங்கும் என்றும், படோடாபமாக அறிவிக்கபட்டது. ஆனால் தற்போது BSNL, 4G சேவையினை எப்போது துவங்கும் என்பது, விடை தெரியாத வினாவாக மாறிவிட்டது. அதில் பல நிச்சயமற்ற நிலைமைகள் உருவாகி உள்ளன.  


BSNLக்கான 4G கருவிகளை, TCS நிறுவனம் வழங்கும் என்று நம்மிடம் கூறப்பட்டது. இதற்காக சண்டிகார், அம்பாலா உள்ளிட்ட இடங்களில், TCS நிறுவனம் தனது சோதனைகளை துவக்கியது. இந்த நிறுவனம் 31.12.2021க்குள், தனது PROOF OF CONCEPT (PoC)ஐ முடித்திருக்க வேண்டும். PROOF OF CONCEPT (PoC)ஐ முடிப்பது என்றால், BSNLக்கு 4G கருவிகளை வழங்குவதற்கான தொழில்நுட்ப திறன், தன்னிடம் உள்ளது என, TCS நிறுவனம் நிரூபிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்தில், TCS நிறுவனத்தால் தனது PROOF OF CONCEPT (PoC)ஐ முடிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.  


அதன் விளைவாக, TCSன் PoCக்கு, தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.  


இந்த சூழ்நிலையில், 31.03.2022 அன்று, 6,000 4G கருவிகளை வாங்குவதற்கான உத்தரவை BSNL நிறுவனம், TCSக்கு வழங்கியது. ஆனால் இதுவரை அந்த உத்தரவை, TCS நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அறியும் போது அதிர்ச்சியாக உள்ளது. BSNL குறிப்பிட்ட விலைக்கு 6,000 4G கருவிகளை வழங்க TCS விரும்பவில்லை என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விலை தொடர்பாக BSNL மற்றும் TCSக்கு இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சந்தையில் பொருட்களின் கடும் விலையேற்றத்தையும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியையும் காரணம் காட்டி, கருவிகளின் விலையை அதிகரிக்க TCS நிறுவனம் முயற்சிக்கின்றது.  


தற்போது ஜூன் மாதம் நிறைவடைய உள்ளது. பாரத பிரதமர், BSNLன் 4G சேவையை துவக்குவதற்காக குறிப்பிடப்பட்ட சுதந்திர தினத்திற்கு இன்னமும் ஒன்னரை மாதங்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள், 5G சேவையினை துவங்க உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், BSNL நிறுவனம் இன்னமும் 4G சேவையினை துவங்கவே சிரமப்பட்டுக் கொண்டிருப்பது, BSNLக்கும் அதன் ஊழியர்களுக்கும் வேதனை தரும் விஷயமாகும். 4G சேவை துவங்குவதற்கு காலதாமதம் ஆவதன் காரணமாக, BSNLன் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விரைவில், விருப்ப ஓய்வு திட்டத்தித்கு முந்தைய நிலைக்கு கூட செல்லக்கூடும்.  


அதேசமயத்தில், தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், வெகு நாட்களுக்கு முன்னரே, BSNL, தனது 4G சேவையினை துவங்கி இருக்க முடியும் என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி. BSNLன் வருவாயில், இந்த இரண்டு மண்டலங்களும் கணிசமான பங்கினை வகிக்கின்றன. இந்த இரண்டு மண்டலங்களில் உள்ள 19,000 டவர்களை, ஒரு சில வாரங்களில், நோக்கியா நிறுவனம் மேம்படுத்தி இருக்கும். அதற்காக BSNL நிறுவனம், 500 கோடி ரூபாய்களை செலவளித்திருந்தால் மட்டுமே போதும்.  


இதனை ஏன் செய்யவில்லை? அரசாங்கமும், BSNL நிர்வாகமும், ஏன் TCSன் பின் ஓட வேண்டும்? BSNL நிறுவனம், 4G சேவையினை துவங்குவதற்கு, தொடர்ச்சியாக ஏன் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன? இந்த தேசம், இவற்றிற்கான பதிலை எதிர்பார்க்கின்றது.


 *தோழர் P.அபிமன்யு* *பொதுச்செயலாளர்*








 


 



 

 தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்

தமிழ் மாநிலம்


கோரிக்கை பதாகை ஏந்தி போராட்டம்


சென்னை முதன்மை பொது மேலாளர் அலுவலகம்


30.06.2022 வியாழக்கிழமை காலை 10 மணி


BSNL நிர்வாகமே


• 21 மாத காலமாக நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்கிடு.


• ஒப்பந்த தொழிலாளர்களை பட்டினி போட்டு சாகடிக்காதே.


• ஒப்பந்த தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாதே.


• அவுட்சோர்சிங் திட்டத்தை மறு பரிசீலனை செய்திடு.


தொழிலாளர் நலச் சட்டங்களான EPF, ESI, குறைந்தபட்ச ஊதியம் ஆகியவற்றை அவுட்சோர்சிங் திட்டத்தில் உறுதி செய்திடு.


• மறைந்த ஒப்பந்த ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு சட்டப்பூர்வமான நிவாரணம் வழங்கிடு.


• நீதி மன்ற தீர்ப்பின்படி EPF ESI - யை ஒப்பந்த தொழிலாளர் கணக்கில் சேர்த்திடு.